கொரோனா உறுதி செய்யப்படாமலே, அடுத்தடுத்து கன்னியாகுமரியில் மரணம்!  - Seithipunal
Seithipunal


கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா சிறப்பு வார்டில் சிகிச்சை பெற்று வரும் நபர்கள் அடுத்தடுத்து மரணமடைந்தது வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இதுவரை 6 பேர் மரணம் அடைந்த நிலையில் தற்போது சாமிநாதபுரத்தைச் சேர்ந்த 56 வயது நபர் ஒருவர் மரணமடைந்துள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. நேற்று மட்டும் மூன்று பேர் பலியான நிலையில் இன்று ஒருவர் மரணம் அடைந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று பலியான 2 வயது ஆண் குழந்தை பிறப்பு எலும்பு நோயினாலும், 66 வயது ஆண் நீண்டநாள் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டு இருந்ததாலும் 24 வயது ஆண் நிமோனியா தொற்றினால் ரத்தத்தில் ஏற்பட்ட நச்சுத்தன்மை காரணமாக இருறந்ததாகவும் விளக்கமளிக்கப்பட்டது.

மேற்குறிப்பிட்டுள்ள அனைவருடைய ரத்த மாதிரிகளை சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று நோய் இருக்கிறதா என இதுவரை முடிவுகள் வெளியாகவில்லை. தற்போது இருந்த 56 வயது நபரின் ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அவருக்கும் கொரோனா இருக்கிறதா என்பதற்கான ஆய்வு முடிவுகள் எதுவும் வெளியாகவில்லை.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

one person died in kanyakumari corona special ward


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->