பள்ளத்தில் கவிழ்ந்த சரக்கு வாகனம்.. ஒருவர் பலி.. 18க்கும் மேற்பட்டோர் படுகாயம்..!
one person Death in Accident
சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தர்மபுரி மாவட்டம், ஏரியூர் அருகே உள்ள ஜருகு பகுதியைச் சேர்ந்தவர் உறவினர்கள் கிரகப்பிரவேசத்திற்கு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சரக்கு வேனில் சென்று விட்டு வீடு திரும்பி கொண்டிருந்தனர். சின்னம்பள்ளி பகுதியில் சரக்கு வேன் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக 15 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது.
இதில், சகாதேவன் என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்த விபத்து குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
one person Death in Accident