பரபரப்பான சூழலில், நிலத்தை மீட்டு தர கோரி தீக்குளிக்க முயன்ற 16 பேர்.!
one family 16 members trying to suicide
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருக்கும் போச்சம்பள்ளி கிராமத்தில் முருகேசன் என்பவர் வசித்துவருகிறார். இவர் தனது அண்ணன் தம்பிகளுடன் கூட்டுக்குடும்பமாக வாழ்ந்து வருகின்றார். இவர்களுடைய வீட்டில் 20க்கும் மேற்பட்ட நபர்கள் வசித்து வருகின்றனர்.
முருகேசனுக்கு சொந்தமான 3 சென்ட் நிலத்தை அவரது பக்கத்து வீட்டில் வசித்து வரும் அருணாச்சலம் மற்றும் கேசவன் என்ற இரண்டு பேர் ஆக்கிரமித்து இருக்கின்றனர். இதுகுறித்து, முருகேசன் அப்பகுதி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இருப்பினும் காவல்துறையினர் இதுகுறித்து உரிய நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து நேற்று திடீரென ஆக்கிரமித்த நிலத்தில் அருணாசலமும், கேசவனும் கட்டிடம் கட்ட ஆட்களை கூட்டி வந்து இருக்கின்றனர். இதனால், அதிர்ச்சி அடைந்த முருகேசன் நேற்று மாலை மாத்தூர் காவல் நிலைய ஆய்வாளர் ஆய்வாளரிடம் புகார் மனுவை அளித்துள்ளார்.
ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரமடைந்த முருகேசன் தன்னுடைய குடும்பத்தில் இருக்கும் அனைவரையும் அழைத்துக் கொண்டு காவல் நிலையம் சென்று, அனைவரின் மீதும் மண்ணெண்ணெய் ஊற்றி விட்டு தீப்பற்ற முயற்சித்து இருக்கின்றார்.
இதில் இரண்டு பள்ளி செல்லும் குழந்தைகளும் இருந்துள்ளது. இதனைக் கண்டு காவல்துறையினர் பதறி, அடித்து ஓடி வந்து அவர்கள் மீது தண்ணீரை ஊற்றி காப்பாற்றி இருக்கின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
English Summary
one family 16 members trying to suicide