தண்ணீர் தொட்டிக்குள் விழுந்த ஒன்றரை வயது குழந்தை பரிதாப பலி..!
One and a half year old child dies after falling into water tank
தண்ணீர் தொட்டியில் விழுந்து ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ஆவடி அடுத்துள்ள கள்ளிக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் அருள் (30). இவருக்கு திருமணமாகி மனைவியும் இரு குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில், சம்பவதன்று வீட்டில் விளையாடி கொண்டிருந்த அவரது இளைய மகள் ருத்ரா திடீரென மாயமானார்.
அதிர்ச்சியடைந்த பெற்றோர் அக்கம்பக்கதில் தேடியுள்ளனர். அப்போது குழந்தை அங்குள்ள தண்ணீர் தொட்டியோன்றில் குழந்தை விழுந்தது. உடனடியாக குழந்தையை மீட்ட அவர்கள் மருத்துமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி ருத்ரா பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
One and a half year old child dies after falling into water tank