ஆம்னி பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதி - விபத்து ஓட்டுநர் பலி
Omni bus lorry accident in Dindigul
திண்டுக்கல் மாவட்டத்தில் ஆம்னி பேருந்தும், லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் லாரி ஓட்டுநர் உயிரிழந்துள்ளார்.
சென்னையில் இருந்து சுமார் 40 பயணிகளுடன் தனியார் ஆம்னி பேருந்து ஒன்று கம்பம் நோக்கி சென்று கொண்டிருந்தது.
அப்பொழுது வத்தலகுண்டுவில் இருந்து செங்கல் ஏற்றி வந்த லாரி ஒன்று இன்று அதிகாலை திண்டுக்கல் மாவட்டம் வீரசிக்காம்பட்டி பிரிவு தனியார் பள்ளி அருகே வந்தபோது லாரியும், ஆம்னி பேருந்தும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. லாரியை தென்காசி இடைக்கால் பகுதியை சேர்ந்த மாடசாமி(47) என்பவர் ஓட்டி வந்தார்.
இதில் பேருந்தில் பயணம் செய்த ஓட்டுநர் உட்பட 10 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதைடுத்து இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் இடுப்பாடுகளில் சீக்கிய லாரி ஓட்டுநரை மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் லாரி ஓட்டுநர் மாடசாமி மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்து உள்ளார். இதையடுத்து இந்த விபத்து குறித்து செம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையும் மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Omni bus lorry accident in Dindigul