ராமநாதபுரம் அருகே பரபரப்பு.! மண்வெட்டியால் மூதாட்டி அடித்துக் கொலை.! - Seithipunal
Seithipunal


ராமநாதபுரம் மாவட்டத்தில் வயலுக்கு தண்ணீர் பாய்ச்ச சென்ற மூதாட்டியை மண்வெட்டியால் அடித்துக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் ஓரியூர் மேலக்குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் விவசாயி நாகலிங்கம். இவரது மனைவி கோவிந்தம்மாள் (65). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் கோவிந்தம்மாள் நேற்று முன்தின இரவு வயலுக்கு நீர் பாய்ச்ச சென்றுள்ளார்.

இதையடுத்து கோவிந்தம்மாள் நேற்று காலை நீண்ட நேரமாகியும், வீட்டிற்கு வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த மகள் அனுராதா கோவிந்தாமாளை தேடி வயலுக்கு சென்றுள்ளார். அப்பொழுது கோவிந்தம்மாள் வயலில் கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார்.

இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், கோவிந்தம்மாளின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மோப்ப நாய்கள் வரவைக்கப்பட்டு விசாரணை நடத்தியதில் கீழ குடியிருப்பு பகுதியில் உள்ள ஒரு வீட்டை சுற்றி வந்து மோப்பநாய் நின்றுள்ளது.

இந்நிலையில் முன் விரோதத்தால் கோவிந்தம்மாளை மண்வெட்டியால் அடித்து கொலை செய்து இருக்கலாம் என்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து, இரண்டு தனிப்படைகள் அமைத்து குற்றவாளியை பிடிக்க போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

oldwoman was beaten to death with a shovel in ramanathapuram


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->