கன்னியாகுமரி || மனவேதனையில் முதியவர் தூக்கு போட்டு தற்கொலை.! - Seithipunal
Seithipunal


கன்னியாகுமரி மாவட்டத்தில் மனவேதனை அடைந்த முதியவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் மூலச்சன்விளை பகுதியை சேர்ந்தவர் சிவதாஸ்(60). இவர் சொந்தமாக லாரி ஓட்டி வந்தார். இவரது மனைவி கீதா. இந்நிலையில் சிவாதாஸ்க்கு கடன் பிரச்சனை இருந்ததால் மனமுடைந்து காணப்பட்டுள்ளார்.

இதையடுத்து சிவதாஸ் வீட்டில் உள்ள அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் இதுகுறித்து இராணியல் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இந்த தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உயிரிழந்த சிவதாஸின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து சிவதாஸின் மனைவி கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Oldman suicide in kanniyakumari


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->