காலம்போன வயதில் கற்பழிக்கப்பட்ட பாட்டி.! 90 வயதிலும் தொல்லை.. இளைஞர்கள் அட்டூழியம்.!
old women raped by youngsters
திரிபுரா மாநிலத்தில் வடக்கு திரிபுராவின் பர்ஹால்டி என்ற கிராமத்தில் 90 வயது மதிக்கத்தக்க முதாட்டி ஒருவர் வசித்துவந்துள்ளார். இவருடைய வீட்டுக்கு அருகே இருக்கின்ற இரு இளைஞர்கள் குடியிருந்து வந்து இருக்கின்றனர்.
இதற்கிடையில், கடந்த 24 ஆம் தேதி அந்த முதியவர் தனியாக இருக்கும் பொழுது அவருடைய வீட்டிற்குள் நுழைந்த இளைஞர்கள் அந்த மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்து இருக்கின்றனர்.
இதனால் மிகவும் பாதிக்கப்பட்டு நோய் வாய்ப்பட்ட மூதாட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். இதற்கிடையில் இதுகுறித்து மூதாட்டி அவர்களுடைய உறவினர்களிடம் தெரிவித்ததை தொடர்ந்து நேற்று முந்தைய தினம் காவல் நிலையத்தில் உறவினர்கள் புகார் அளித்து இருக்கின்றனர்.
இது பற்றி வழக்குப்பதிவு செய்து இருக்கும் காவல்துறையினர் தலைமறைவாக இருக்கும் சம்மந்தபட்ட இளைஞர்களை தேடி வருகின்றனர்.
English Summary
old women raped by youngsters