கொசுவை விரட்ட செய்த காரியத்தால், பறிபோன உயிர்.! நாகையில் பரபரப்பு.!
old women dead in nagai
நாகப்பட்டினம் மாவட்டத்தில் கொசுவை விரட்டுவதற்காக தீ கொளுத்தியதால் அந்த தீ கொட்டகை முழுதும் பரவி 15 ஆடுகள் மற்றும் மூதாட்டியை பலிவாங்கி இருக்கின்றது.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருக்கும் வேதாரண்யம் அருகே வடக்கு பகுதியில் மூதாட்டி அஞ்சம்மாள் வசித்து வந்துள்ளார். இவருக்கு 15 ஆண்டுகள் சொந்தமாக இருந்துள்ளது. அனைத்தையும் கொட்டகையில் கட்டி வைத்து இருந்துள்ளார். அதனை பராமரிப்பதற்காக அஞ்சம்மாள் கொட்டகைக்கு சென்று இருக்கின்றார்.
அப்பொழுது கொசுத்தொல்லை அதிகமாக இருந்த காரணத்தால் சில தழைகளை போட்டு புகை வருவதற்காக கொளுத்திவிட்டு இருக்கின்றார். ஆனால் அந்த தழையுடன் சேர்ந்து அருகிலிருந்த கொட்டகைக்குள் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. தீ ஆட்டுக் கொட்டகை முழுவதும் பரவியதால் அஞ்சம்மாள் கருகி உயிரிழந்தார்.
அக்கம்பக்கத்தில் யாருமே இல்லாத காரணத்தால் அவரை காப்பாற்ற முடியவில்லை. மேலும், கொட்டகையில் இருந்த 15 ஆடுகளும் இந்த தீக்கு இரையாக்கியது. பின்னர் இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்துவந்த தீயணைப்பு துறையினர் தீயை அனைத்து இருக்கின்றனர் காவல்துறையினர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.