பாதபூஜை செய்து ஆசிரியர்களை பெருமைப்படுத்திய முன்னாள் மாணவர்கள்..!
old students honored by teachers
டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்தநாளான இன்று (செப்ட.,5) தேசிய ஆசியர்தின விழாவாக அரசு அறிவித்துள்ளது. மாணவர்களுக்கு பாதுகாப்பு அரணாகவும், நல்ல வழிகாட்டியாகவும், சிறந்த ஆசானாகவும் விளங்கும் ஆசிரியர்களுக்காக இன்று ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில், நீலகிரி மாவட்டத்தில் உள்ள பந்தலூர் அருகே "நம்பிக்கை நமது அமைப்பு" சார்பில், கொளப்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சியில் மாணவி வித்யா வரவேற்புரை வழங்கினார்.இதற்கு பள்ளி தலைமையாசிரியர் முகம்மது அமீன் தலைமை வகித்தார். அமைப்பின் நிர்வாகிகள் கவிந்தன், பிரதீபா, புனிதா முன்னிலை வகித்தனர்.மாணவ-மாணவிகளுக்கு கேக் ஊட்டி, வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து முன்னாள் மாணவர்கள், ஆசிரியர்களுக்கு பாத பூஜை செய்து, தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்து ஆசிர்வாதம் பெற்றனர்.
English Summary
old students honored by teachers