பேசுவதற்கு செல்போன் தராத முதியவர்... இளைஞர் வெறிச்செயல்..! - Seithipunal
Seithipunal


பேசுவதற்கு செல்போன் கேட்டு தராததால் முதியவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துகுடி மாவட்டம், மீனாட்சி பட்டி பகுதியில் நேற்று நாகபாத்திரம் என்ற முதியவர் கொலை செய்ப்பட்டு கிடந்தார். அந்த பகுதியை சேர்ந்த மக்கள் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். அவரின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது, அங்கு சந்தேகபடும் படி சுற்றி திரிந்த இளைஞர் மீது காவல்துறைக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனை அடுத்து, அவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர் கொம்புகாரன் பகுதியை சேர்ந்த தங்கராஜ் என்பது தெரியவந்தது.

மேலும், அந்த முதியவரை கொலை செய்ததை ஒப்பு கொண்டார். அவர் அளித்த வாக்குமூலத்தில் தெரிவித்திருப்பதாவது,  பேசுவதற்கு செல்போன் கேட்ட போது அந்த பெரியவர் தராததால் ஆத்திரத்தில் அவரை கொலை செய்து விட்டு செல்போனை எடுத்து சென்றதாக தெரிவித்தார்.

இதனை அடுத்து, வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

OLD MAN MURDER NEAR THOOTHUKUDI


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->