குடும்பதகராற்றால் கொலை செய்யப்பட்ட முதியவர்.. மயிலாடுதுறை அருகே பரபரப்பு..!
old man Murder Near Mayiladuthurai
குடும்பதகராற்றால் முதியவர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம், கிள்ளியூர் பகுதியில் வசித்து வந்தவர் சித்திரன். இவருக்கு அதே பகுதியை சேர்ந்த பாலமுருகன், பிச்சைக்கண்ணு என்பவருக்கும் இடையில் நீண்ட நாட்களாக குடும்ப தகராறு இருந்து வந்துள்ளது.
இந்நிலையில், சித்திரன் மகன் பள்ளிக்கு செல்லவில்லை என கூறப்படுகிறது இதனால், மகனை சித்திரன் திட்டியதாக கூறப்படுகிறது. மதுபோதையில் அவர் தங்களை திட்டுவதாக எண்ணி பாலமுருகன், பிச்சைகண்ணு குடும்பத்தினர் சித்திரனுடன் தகராற்றில் ஈடுப்பட்டனர்.
இந்த தகராற்றில் சித்திரன் சம்பவ இடத்திலேயே சித்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் 3 பெண்கள் உள்ளிட்ட 5 பேரை கைது செய்தனர்.
English Summary
old man Murder Near Mayiladuthurai