4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.. முதியவருக்கு ஆயுள்..!
Old man Jailed Due to harassing 4 years old child
4 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த இவருக்கு ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பகுதியை சேர்ந்தவர் சுந்தர்ராஜன் இவர் தனது வீட்டிற்கு அருகில் விளையாடிக்கொண்டிருந்த 4 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதனை அறிந்த சிறுமியின் பெற்றோர் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இந்த புகாரின் அடிப்படையில் அவரை கைது செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் இந்த வழக்கு ஸ்ரீவில்லி புத்தூர் போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் நான்கு வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த சுந்தரராஜனுக்கு ஆயுள் தண்டனையும் ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
English Summary
Old man Jailed Due to harassing 4 years old child