கோயம்புத்தூர் : கிணற்றில் விழுந்த முதியவருக்கு நேர்ந்த சோகம்..!
old man Death in Coimbatore
கிணற்றுக்குள் தவறி விழுந்த முதியவர் பலியான சம்பவம் சோத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம், வெள்ளலூர் அண்ணாமலை அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கருப்பசாமி(81). அவரது வீட்டில் அருகில் உள்ள கிணற்றில் மோட்டார் பழுதடைந்துள்ளது. அதனால், அவர் டிராக்டெர் மூலம் கயிறு கட்டி மோட்டாரை வெளியே எடுக்க முயன்றுள்ளார்.
அப்போது, எதிர்பாராத விதமாக அவர் கிணற்றினுள் விழுந்துள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவரது தீயணைப்புதுறையினருக்கு தகவல் அளித்தனர். விரைந்துவந்த்ன தீயணைப்புதுறையினர் அவரின் சடலத்தை மீட்டனர்.
சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
old man Death in Coimbatore