நலிவடைந்த தொழில்... தினம் குடும்ப தகராறு.. முதியவர் எடுத்த விபரீத முடிவு..!
old man committed suicide Due To Family Issue
குடும்ப பிரச்சனை காரணமாக முதியவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம், அரையாளம் பகுதியை சேர்ந்தவர் வேடியப்பன் . இவர் தனது மனைவி சிவசங்கரியுடன் வசித்து வருகிறார். தச்சுதொழிலாளியாக வேலை செய்து வருகிறார். கடந்த சில நாட்களாக தொழில் சரியாக நடக்கவில்லை என கூறப்படுகிறது.
இதனால், கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. மன உளைச்சலில் வேடியப்பன் விஷத்தை குடித்து மயக்கமடைந்து கிடந்தார். இதனை கண்ட குடும்பதினர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அனு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தார். இதனை அடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தற்கொலை எண்ணம் உங்களுக்கு தோன்றினால் உங்களுக்கு ஆலோசனை தரவும், ஆறுதல் சொல்லவும் அழையுங்கள்.
104
044 -2464000 (ஸ்னேகா ஃபௌண்டேஷன் ட்ரஸ்)
022-25521111 (ஐகால் ப்யசோசோசியல் ஹெல்ப்லைன்) (Mon – Sat, 8am–10pm)
English Summary
old man committed suicide Due To Family Issue