நகைக்காக மூதாட்டி கொலை., தூத்துகுடியில் பரபரப்பு..!
Old Lady Murder Near Thoothukudi
நகைக்காக மூதாட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துகுடி மாவட்டம், அம்மன்புரம் பகுதியை சேர்ந்தவர் நாகூர் அம்மாள். இவர் தனியே வீட்டில் வசித்து வருகிறார். இவரது பேரன் தினமும் சாப்பாடு கொண்டு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.
இந்நிலையில் , நேற்று வழக்கம் போல அவரது பேரன் சாப்பாட்டு கொண்டு சென்ற போது மூதாட்டி உயிரிழந்த காணப்பட்டார். உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. விரைந்து வந்த காவல்துறையினர் அவரின் சடலத்தை மீட்டு காவல்துறையினர் பிரேதபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையியனர் அந்த இடத்தில் ஆய்வு செய்தனர். அப்போது அவரின் வீட்டில் இருந்த 5 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. நகைக்காக மூதாட்டி கொலை செய்யப்பட்ட அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Old Lady Murder Near Thoothukudi