90 வயதிலும் 50 கிலோ எடையை அசால்ட்டாக தூக்கி மாஸ் காட்டும் தமிழ் பாட்டி..!!
Old lady have good health in Chennai
திருவள்ளுர் மாவட்டத்தில் உள்ள செவ்வாய்ப்பேட்டையில் வசித்து வரும் மூதாட்டி ரங்கம்மாள் (வயது 93). இவருக்கு வயது 93 ஆகி இருந்தாலும், உடல் உறுதியுடன் ஜிம்னாஸ்டிக் செய்து வருகிறார்.
இவர் சமீபத்தில் 50 கிலோ பளுவை தூக்கும் கருவியை அசால்ட்டாக கையாளும் காட்சியை கண்டு பெருமளவு இன்ப அதிர்ச்சிக்கு அக்கம் பக்கத்தினர் உள்ளாகியுள்ளனர். மேலும், இந்த விஷயம் தொடர்பாக மூதாட்டி ரெங்கம்மாளிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
இதில், " எனது இளமையான வயதில் ஆரோக்கியமான உணவுகளை நான் சாப்பிட்டேன். இதனால் தற்போதும் அதிகளவு எடையை எளிமையாக தூக்கிவிடுகிறேன். நான் உடற்பயிற்சி செய்வது இல்லை.
பேரக்குழந்தைகள் உடற்பயிற்சி செய்கையில், அவர்களுடன் சேர்ந்து எடையை தூக்க ஆசைப்படுவேன். என்னால் தூக்க இயலுமா என்று அனைவரும் பயப்படும் வேளையில், நான் அனைவரும் வியக்கும் வகையில் இருப்பேன்.
சிறு வயதில் சாப்பிட்ட சாப்பாடு என்னை திடகாத்திரமாக வைத்திருக்கிறது. முடக்கத்தான் கீரை, தூதுவளை மற்றும் பிரண்டை போன்ற உணவுகள் சாப்பிட்டால் நல்ல ஆரோக்கியமான உடல் மற்றும் வாழ்நாள் நலனை பெற இயலும்.
Tamil online news Today News in Tamil
English Summary
Old lady have good health in Chennai