மின் கம்பி அறுந்து விழுந்ததில் மூதாட்டி பரிதாப பலி.. திருச்சி அருகே நிகழ்ந்த சோகம்..! - Seithipunal
Seithipunal


மின்கம்பி அறுந்து விழுந்ததில் விவசாய கூலில் தொழிலாளில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம், கொத்தமல்லில் பகுதியில் வசித்து வந்தவர் ஜானகி (52).விவசாய கூலி தொழிலாளியான இவர் அங்குள்ள வயலில் வேலை செய்து வந்துள்ளார். அப்போது தாழ்வாக தொங்கிய மின் கம்பி ஒன்று யாரும் எதிர்பார்க்காத வகையில் அவர் மீது அறுந்து விழுந்தது.

இதில், மின்சாரம் தாக்கி அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் மின்கம்பி அறுந்து விழுந்தது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Old Lady Death Near Trichy


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->