நாய்கடிக்கு சிகிச்சை அளிக்காமல் இருந்த மூதாட்டி பலி.. விருதுநகர் அருகே நிகழ்ந்த சோகம்..!
Old Lady Dead Refusing Treatment For Dog bite
நாய்க்கடிக்கு சிகிச்சை அளிக்காததால் 50 வயது பெண்மணி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் ஆலங்குளம் பகுதியை சேர்ந்தவர் புஷ்பராஜ். இவரது மனைவி மாரியம்மாளை ஒரு மாதத்திற்கு முன்பு வீட்டின் அருகே சுற்றித்திரிந்த தெருநாய் கொடுத்துள்ளது. சிகிச்சை எடுத்துக் கொள்ளாமல் அலட்சியமாக இருந்துள்ளார்.
அவரது குடும்பத்தினரும் இதனை கண்டுகொள்ளவே இருந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில தினங்களாக அவரது நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இன்று காலை உடல் பாகங்கள் செயலிழந்த நிலையில் அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது.
இதனை கண்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் அங்கு அவர் பரிதாபமாக உயிரிழந்தார். நாய்க்கடிக்கு முறையான சிகிச்சை எடுத்துக் கொள்ளாததால் அவரை ரேபிஸ் நோய் தாக்கி உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் ரேபிஸ் தடுப்பூசி எடுத்துக் கொள்ள அறிவுறுத்தியுள்ளனர்.
English Summary
Old Lady Dead Refusing Treatment For Dog bite