மின்சாரம் தாக்கி முதிய தம்பதி பரிதாப பலி.. நாமக்கல் அருகே நிகழ்ந்த சோகம்..!
Old Couple Death in Namakkal
மின்சாரம் தாக்கி முதிய தம்பதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
நாமக்கல் மாவட்டம் பண்டமங்கலம் பகுதியை சேர்ந்தவர் பரமசிவம். இவருக்கு பழனியமாள் மனைவி உள்ளார். முதியவர்கள் இருவரும் தனியே வசித்து வருகின்றனர்.இந்நிலையில் பழனியம்மாள் அவரது வீட்டின் அருகில் இருந்த ஆட்டுகொட்டைகைக்கு சென்றுள்ளார். அப்போது அறுந்து கிடந்த மின் கம்பியை கவனிக்காமல் அவர் கைகளில் எடுத்துள்ளார்.
இதனால், அவர் மீது மின்சாரம் தாக்கியது. இதனை கண்ட பரமசிவம் அவரை காப்பாற்றி சென்ற போது அவர் மீது மின்சாரம் தாக்கியது இதனால் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் அவர்களின் உடலை விட்டு மீட்டு பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
English Summary
Old Couple Death in Namakkal