தனிமைக்கு பயந்த முதிய தம்பதி எடுத்த விபரீத முடிவு.. திருவண்ணாமலை அருகே நிகழ்ந்த சோகம்..! - Seithipunal
Seithipunal


முதிய தம்பதி தற்கொலை செய்துகொண்ட விவகாரம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டம் சட்டுவந்தங்கல் கிராமத்தை சேர்ந்தவர் வரதராஜுலு. இவருக்கு தனலட்சுமி என்ற மனைவி இருக்கிறார். இவர்கள் மகளுடன் வசித்து வந்தனர். தனலட்சுமி கடந்த 10ம் தேதி கீழே விழுந்ததில் இடுப்பு எலும்பு முறிவு ஏற்பட்டது. தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிகப்பட்டார்

கடந்த 18ம் தேதி தனலட்சுமிக்கு இடுப்பு அறுவை சிகிச்சை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. மனைவிக்கு அறுவை சிகிச்சை செய்யும் பொழுது ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால் தன்னால் உயிர்வாழ முடியாது என வரதராஜூலு கூறிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், அனைவரும் உறங்கிய பெண் இருவரும் விஷம் அருந்தியுள்ளனர்.

குடும்பத்தினர் அவர்களை மீட்டு மருத்துமனைக்கு கொண்டு சென்று இருவரையும் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் அவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தனிமையை கண்டு பயந்து முதிய தம்பதி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Old Couple Committed Suicide in Thiruvannammalai


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->