சிறுமியை காப்பாற்ற சென்ற நர்சிங் மாணவிக்கு நிகழ்ந்த சோகம்..! - Seithipunal
Seithipunal


நீரில் மூழ்கிய சிறுமியை காப்பாற்ற சென்ற நர்சிங் மாணவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கபட்டியை சேர்ந்தவர் முருகன். இவருக்கு போதும்பொண்ணு என்ற மகள் உள்ளார். இவர் அங்குள்ள கல்லூரி ஒன்றில் பிஎஸ்சி நர்சிங் முதலாமாண்டு படித்து வருகிறார்.

இந்நிலையில் சம்பவத்தன்று போதும்பொண்ணு தனது தோழிகளுடன் குளத்தில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது அந்த குளத்தில் அதே பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமி ஒருவர் எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கினார்.

இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த போதும்பொண்ணு உடனே அந்த சிறுமியை காப்பாற்ற முயன்றுள்ளார். அந்த சிறுமியை காப்பாற்றி வெளியே தள்ளிய அவரால் வெளியே வரமுடியாமல் நீரில் மூழ்கினார்.

தோழிகளின் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர். அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

 தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் அவரை உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். சிறுமியை காப்பாற்ற சென்று நர்சிங் மாணவி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தையும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Nursing student who went to save the girl died in the water


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->