#பண்ருட்டி || கல்லூரி மாணவி தற்கொலை முயற்சி வழக்கில் தலைமறைவாக இருந்த டேவிட், பிரேம் கைது.!
Nursing College Student Attempt suicide
விழுப்புரம் மாவட்டம் ஏகே குச்சிபாளையம் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர், பண்ருட்டி பகுதியில் அமைந்துள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.
இந்நிலையில், அந்த 17 வயது மாணவி இரு தினங்களுக்கு முன் பண்ருட்டி ரயில்வே மேம்பாலத்தின் மேலே இருந்து, கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவம் குறித்து பண்ருட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், பெரும் அதிர்ச்சியான தகவல் வெளியாகி உள்ளது.
அந்த 17 வயது மாணவி படித்து வந்த நர்சிங் கல்லூரியில் மாதம்தோறும் மருத்துவ முகாம் நடத்தப்படுவது வழக்கம், கடந்த மாதம் சேலம் அருகே உள்ள ஏற்காடு பகுதியில் நடைபெற்ற மருத்துவ முகாம் நடந்து உள்ளது.
இந்த மருத்துவ முகாமிற்கு 17 வயது இந்த மாணவியும் சென்றுள்ளார். அப்போது, கல்லூரி நிர்வாகத்தை சேர்ந்த நிஷா, டேவிட், அன்பு, பிரேம் ஆகியோர் ஒன்று சேர்ந்து அந்த மனைவிக்கு குளிர்பானத்தில் மயக்கமருந்து கொடுத்து பலாத்காரம் செய்துள்ளனர்.
இந்த நிலையில், அந்த 17 வயது மாணவியின் அண்ணனுக்கு இந்த விவகாரம் தெரிய வந்ததால், அந்த நர்சிங் கல்லூரி மாணவி தற்கொலைக்கு முயன்று உள்ளது தற்போது போலீசாரின் விசாரணையில் வெளிவந்துள்ளது.
இதனையடுத்து, போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், பண்ருட்டி பகுதியில் பதுங்கியிருந்த நிஷா மற்றும் அன்பு ஆகியோரை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள டேவிட், பிரேம் ஆகியோரை போலீசார் தேடி வந்தனர்.
இந்நிலையில், தலைமறைவாக இருந்த டேவிட், பிரேம் ஆகியோரை போலீசார் இன்று அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
English Summary
Nursing College Student Attempt suicide