இப்பதான் அவுங்க (மத்திய அரசு) ஆட்சி.. நாங்க யாருனு தெரியும் ல.. சீமான் ஆவேசம்.!!
NTK Seeman Pressmeet at Chennai Arumbakkam 1 August 2021
சென்னையில் உள்ள அரும்பாக்கத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செய்தியாளர்களை சந்தித்தார். இந்த செய்தியாளர்கள் சந்திப்பில், " ஒருதலைமுறை தாண்டி திருச்சியில் இலங்கை தமிழர்கள் குடியிருக்கிறார்கள்.அதற்கு மேல் மத்திய அரசுக்கு என்ன தேவைப்படுகிறது. அவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க மறுப்பது ஏன்?. அவர்கள் அப்படி நினைத்தால் தமிழர்கள் இந்தியர்களே கிடையாதா?.
அவர்களின் வழியில் விட்டுவிட்டால் எண்களின் நிலைப்பாடு தமிழர்கள் இந்தியர்களே கிடையாது. இவர்கள் இப்போது தான் கோட்டையை கட்டி ஆட்சி செய்கிறார்கள். நாங்கள் அன்றைய காலத்திலேயே கோட்டை கட்டி ஆண்ட வம்சம். எங்கள் தமிழ் வம்சம்.
நாங்கள் சைவர்கள். திருமானிகள். நான் பேசும் பேச்சுக்கள் மோடி மற்றும் அமித் ஷாவுக்கு தமிழ் மொழி தெரிந்து அவர்கள் புரிந்திருக்குமாயின் பேரதிர்ச்சிக்கு உள்ளாகி இருப்பார்கள். நமது வழிக்கு அவர்கள் வந்திருப்பார்கள் " என்று தெரிவித்தார்.
முன்னதாக மத்திய அரசு, திருச்சி இலங்கை அகதிகள் முகாமில் உள்ளவர்களுக்கு இந்திய குடியுரிமை கேட்ட வழக்கில், இலங்கையில் இருந்து அகதிகளாக தமிழகம் வந்தவர்களுக்கு இந்திய குடியுரிமை கொடுக்க முடியாது, அவர்கள் சட்டவிரோத குடியேறிகள் என்று நீதிமன்றத்தில் வாதிட்டது குறிப்பிடத்தக்கது.
English Summary
NTK Seeman Pressmeet at Chennai Arumbakkam 1 August 2021