கேடுகெட்ட பணநாயகம் இருக்கும் வரை ஜனநாயகம் என்பது கேள்விக்குறியானது தான் - சீமான் பரபரப்பு பேட்டி.! - Seithipunal
Seithipunal


தமிழகம் முழுவதும் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவுகள் காலை 7 மணிமுதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழக வாக்காள பெருமக்கள் தங்களின் வாக்குகளை பதிவு செய்ய காலை முதலாகவே வாக்குச்சாவடி மையங்களுக்கு வருகை தந்து வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர். 

கொரோனா பரவல் காரணமாக முகக்கவசம் உட்பட கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளுடன் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. வாக்குச்சாவடி மையங்களில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் நிலையில், பதற்றமான வாக்குச்சாவடிகளில் துணை இராணுவ படையினர் களமிறக்கப்பட்டுள்ளனர். 

இந்நிலையில், வளசரவாக்கத்தில் வாக்களித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தனது வாக்குகளை பதிவு செய்து செய்தியாளர்களை சந்தித்தார். இந்த செய்தியாளர்கள் சந்திப்பில், " இயந்திரம் என்பது பழுதாகிவிடும் என்பது நன்கு தெரிந்ததே. வாக்குகளுக்கு இயந்திரங்களை கண்டுபிடித்த பல நாடுகளே அதனை கைவிட்டுள்ளது. தலைமை தேர்தல் அதிகரிக்கும் இயந்திரத்தில் எந்த பிரச்சனையும் ஏற்படாது என்று கூறுகிறார். 

மனித கழிவுகளை மனிதரையே அல்லவைத்துவிட்டு, வாக்குகளை இயந்திரத்தில் பதிவு செய்ய வைக்கிறார்கள். தேர்தல் ஆணையம் என்பதே நாடக கம்பெனி தான். பணம் கொடுக்கும் வேட்பாளர் 10 வருடம் இன்று வரை தடை செய்யப்ட்டுள்ளாரா?. 

பணப்பட்டுவாடா செய்தவர்கள் மீது தேர்தல் ஆணையம் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது. கேடுகெட்ட பணநாயகம் இருக்கும் வரை ஜனநாயகம் என்பது கேள்விக்குறியானது தான். அமெரிக்காவிலேயே வாக்குகள் பதிவு செய்யப்படும் முறை பழைய முறையையே பின்பற்றுகிறார்கள். 

இந்தியா டிஜிட்டல் என்று கூறுகிறார்கள். ஏன் தேர்தல் முடிவுகள் வருவதற்கு ஒரு மாத இடைவெளி?. தேர்தல் அமைப்பு முறையை மாற்ற வேண்டும். மண்ணில் புரட்சி வருவதற்கு முன்னதாக, மக்கள் மனதில் புரட்சி வர வேண்டும் " என்று பேசினார்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

NTK Seeman Pressmeet 6 April 2021 TN Election 2021


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->