ரேஷன் அட்டைதாரர்களுக்கு இனி இலவச அரிசி இல்லை.!
not free rice for ration cards
தமிழகம் போலவே புதுச்சேரியிலும் அந்த மாநில அரசு சார்பில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு தற்போது இலவச அரசி வழங்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில், இனி ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவச அரிசி கிடையாது என புதுவை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.
ரேஷன் அட்டை வைத்திருக்கும் அனைவருக்கும் மாதம் மாதம் ரேஷன் கடைகளில் இலவசமாக அரிசி வழங்குவதற்கு பதிலாக பணம் செலுத்தும் முறையே தொடர வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி அரசால் ரேஷன் கார்டுகளுக்கு இலவச அரிசி வழங்குவதற்கு பதிலாக, பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரிடையாக பணம் செலுத்தும் முறையே தொடர வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக ஆளுநர் கிரண்பேடி தகவல் அளித்துள்ளார்.
English Summary
not free rice for ration cards