#நாமக்கல் || வடமாநில தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை - Seithipunal
Seithipunal


நாமக்கல்லில் வட மாநில தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

உத்தரப்பிரதேசம் மாநிலம் முசாத்பூர் பகுதியை சேர்ந்தவர் சுக்பீர்(22). இவர் கடந்த மூன்று மாதங்களாக நாமக்கல் மாவட்டத்தில் உள்ள மெட்டாலாவில் தனியார்க்கு சொந்தமான மரவள்ளிக்கிழங்கு மாவு மில்லில் வேலை பார்த்து வந்தார்.

இவர் மில் உரிமையாளருக்கு சொந்தமான வீட்டில் தங்கி வேலை பார்த்து வந்த நிலையில், சுக்பீர் செல்போனில் அவரது குடும்பத்தினருடன் அடிக்கடி பேசி வந்துள்ளார்.

இதேபோல் நேற்று செல்போனில் பேசிய சுக்பீர், இரவு வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதையடுத்து அவரை மீட்டு சிகிச்சைக்காக ராசிபுரம் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு பரிசோதனை செய்த மருத்துவர் ஏற்கனவே சுக்பீர் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார். 

இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த ஆயில்பட்டி காவல்துறையினர், வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Northern worker commits suicide by hanging in namakkal


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->