நாளை குடிநீர் விநியோகத்திற்கு தடை.! வெளியான முக்கிய அறிவிப்பு.!
no water in thirunelveli
நாளை நெல்லை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் குடிநீர் தடைப்படும் என கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து நெல்லை மாநகராட்சி ஆணையாளர் விஜயலட்சுமி வெளியிட்டுள்ள அறிக்கையில், "நெல்லை மாநகராட்சி பாளையங்கோட்டை மண்டல பகுதியில் தாமிரபரணி ஆற்றில் மணப்படை வீடு தலைமை நீரேற்று நிலையத்தில் இருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றது
இந்த பிரதான குழாயை தற்பொழுது செயல்படுத்தப்பட இருக்கும் அரியநாயகிபுரம் தாமிரபரணி புதிய குடிநீர் திட்ட பணி குழாய்களுடன் இணைக்கும் பணி இன்று நடைபெறுகின்றது. இதன் காரணமாக, மண்டலத்துக்கு உட்பட்ட வார்டு எண் 13 லிருந்து 25 வரை மற்றும் 16 வது வார்டின் ஒரு பகுதியில் மட்டும் நாளை குடிநீர் வினியோகம் செய்ய முடியாது.
இதன் காரணமாக, பொதுமக்கள் கிடைக்கும் குடிநீரை வைத்து சிக்கனமாக செயல்படுத்தி பயன்படுத்திக்கொள்ளவும்." என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.