அமைதிக்கு குந்தகம் விளைவித்தாக நித்தியின் சீடர்கள் கைது..!!
Nityananda's disciples arrested
நித்தியின் சீடர்களுடன் கிராமத்தினர் தகராற்றில் ஈடுப்பட்ட சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
நாமக்கல் மாவட்டம், பட்டணம் முனியம்பாளம் பகுதியை சேர்ந்தவர் அத்தாயி. இவர் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன் நித்தியானந்தாவின் ஆசிரமத்திற்கு சென்றுள்ளார்.
இந்நிலையில், அத்தாயி மீது வங்கியில் உள்ள கடன் தொடர்பாக கையெழுத்து ஈட வேண்டும் என்பதற்காக அவரது கணவர் அவரை பலமுறை நேரில் சென்று அழைத்துள்ளார்.
இதனால், நித்யானந்தாவின் சீடர்களுடன் அவர் கிராமத்திற்கு வந்துள்ளார். அப்போது அத்தாயின் உறவினர்களுக்கும் நித்தியானந்தாவின் சீடர்களுக்கும் இடையில் தகராறு ஏற்ப்பட்டது.
இதுகுறித்து காவல்துறையிடன் புகார் அளித்த இரு தரப்பும் புகார் அளித்தது. புகாரை பெற்று கொண்ட காவல்துறையினர். பொது அமைதிக்கு இடைஞ்சல் விளைவித்ததாக அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படுள்ளது.
English Summary
Nityananda's disciples arrested