பூமியின் மீது பாசம் கொண்ட நித்தி வெளியிட்ட அடுத்த அல்டிமேட் வீடியோ..! திகைப்பில் நெட்டிசன்கள்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் திருவண்ணாமலை மாவட்டத்தை சார்ந்த நித்யானந்தா பெங்களூரை அடுத்துள்ள பிடதி பகுதியில் நித்தியானந்த தியான பீடம் என்ற பெயரில் ஆசிரமத்தை நிறுவி நடத்தி வந்தார். இவரின் சொற்பழிவை கேட்ட கோடான கோடி பக்தர்கள் மற்றும் பக்தைகள் ஆதரவு பெருகவே., இவரின் கிளைகளும் இந்தியா முழுவதும் செயல்பட துவங்கியது.இவருக்கு இந்தியாவில் உள்ள பக்தர்கள் மற்றும் பக்தைகளை போலவே வெளிநாட்டு ஆதரவும் பெருகியது. 

இவரது செயல்பாடுகள் அனைத்தும் சிறப்பாக சென்று கொண்டு இருக்கிறது என்று எண்ணியிருந்த நிலையில்., பகீரென நடிகை ரஞ்சிதாவுடன் குதூகலமாக இருக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் சர்ச்சையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது. இந்த வீடியோ உண்மை இல்லை என்று இன்று வரை இரட்டை கால்களில் அமர்ந்து சமாளித்து வரும் நிலையில்., அவ்வப்போது பல சர்ச்சை பேச்சுகளும் பேசி இணையதள நெட்டிசன்களிடம் குட்டு வாங்கி சென்றார். இவரை ஒரு குணசித்திர காமடி நடிகராக இணையத்தளத்தில் உருவாக்கி நெட்டிசன்கள் விளையாடி வந்த நிலையில்., பெரும் அதிர்ச்சியாக குழந்தை கடத்தல் மற்றும் பாலியல் வன்கொடுமை புகார்கள் எழத்துவங்கியது.

nithyanandha, nithyanandha kailaasaa, நித்யானந்தா, கைலாசா,

இது தொடர்பாக புகார்கள் அடுத்தடுத்து தொடர்ந்து எழவே., காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வந்தனர். அனைவருக்கும் டிமிக்கி கொடுத்து அவ்வப்போது இணையத்தளம் மூலமாக சீடர்களிடையே உரையாற்றி வந்த நிலையில்., ஈகுவாடார் நாட்டில் இருக்கும் தீவிற்கு கைலாசா என்று பெயர் வைத்து., அதனை தனி நாடாக அறிவிக்கும் பணியில் தற்போது தீவிர களப்பணியில் வந்தார். இது தொடர்பாக பல வீடியோ காட்சிகளும் அடுத்தடுத்து வெளியாகி வந்த நிலையில்., ஈகுவடார் நாட்டில் நித்தி இல்லை என்றும்., எங்களது நாட்டின் பெயர் அவதூறாக பரப்பப்பட்டு வருவதாகவும்., அவர் ஹைதி என்ற தீவிற்கு தப்பி சென்றுள்ளார் என்றும் அதிகாரபூர்வ அறிவிப்புகள் வெளியானது.

nithyanandha, nithyanandha kailaasaa, நித்யானந்தா, கைலாசா,

இந்த நிலையில்., கடந்த சில நாட்களுக்கு முன்னதாக வெளியான வீடியோ காட்சியில்., திருவண்ணாமலை பொட்டியடி பையன்., உண்டக்கட்டிக்காக அலைந்த சமயத்தில் என்னை விரட்டி நீங்கள் தான் வளர்த்து விட்டீர்கள் என்று கூறி கதறிய நிலையில்., தற்போது வெளியான வீடியோ காட்சியில் தான் பொதுசேவை புரியும் நல்லவன் என்று தனது சீடர்களுக்கு நம்பிக்கையை ஊட்டுகிறார். இது குறித்த வீடியோ காட்சியில் நித்யானந்தா பேசிய சமயத்தில்., பூமியில் தற்போது புவி வெப்பமயமாதல் பிரச்சனை அதிகரித்து வருகிறது என்றும்., இதனை தடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். 

மேலும்., மனிதன் வாழ்வதற்கு பூமி ஒன்று தான் உள்ளது., இந்த பூமியை நாம் கட்டாயம் பாத்துகாக்க வேண்டும்., இப்பூமியை பாதுகாப்பது நமது கடமை என்றும் தனது பூமியின் மீதுள்ள அன்பை வாரி வழங்கி பொழிந்து பேசியுள்ளார். இதன் அடிப்படையில் இவர் எதிர்காலத்தில் தீவை விலைக்கு வாங்கினால்., நல்ல பசுமையான நாட்டினை உருவாக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை வைத்து தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

nithyanandha speech about global warming


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->