என்னைய எவ்வுளவு அடிப்பீங்களோ அடிச்சிக்கோங்க..! அடிச்சி அடிச்சி உணர்வுபோச்சு..!! கதறலிலும் சிரிக்கும் நித்தி.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் திருவண்ணாமலை மாவட்டத்தை சார்ந்த நித்யானந்தா பெங்களூரை அடுத்துள்ள பிடதி பகுதியில் நித்தியானந்த தியான பீடம் என்ற பெயரில் ஆசிரமத்தை நிறுவி நடத்தி வந்தார். இவரின் சொற்பழிவை கேட்ட கோடான கோடி பக்தர்கள் மற்றும் பக்தைகள் ஆதரவு பெருகவே., இவரின் கிளைகளும் இந்தியா முழுவதும் செயல்பட துவங்கியது.இவருக்கு இந்தியாவில் உள்ள பக்தர்கள் மற்றும் பக்தைகளை போலவே வெளிநாட்டு ஆதரவும் பெருகியது. 

இவரது செயல்பாடுகள் அனைத்தும் சிறப்பாக சென்று கொண்டு இருக்கிறது என்று எண்ணியிருந்த நிலையில்., பகீரென நடிகை ரஞ்சிதாவுடன் குதூகலமாக இருக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் சர்ச்சையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது. இந்த வீடியோ உண்மை இல்லை என்று இன்று வரை இரட்டை கால்களில் அமர்ந்து சமாளித்து வரும் நிலையில்., அவ்வப்போது பல சர்ச்சை பேச்சுகளும் பேசி இணையதள நெட்டிசன்களிடம் குட்டு வாங்கி சென்றார். இவரை ஒரு குணசித்திர காமடி நடிகராக இணையத்தளத்தில் உருவாக்கி நெட்டிசன்கள் விளையாடி வந்த நிலையில்., பெரும் அதிர்ச்சியாக குழந்தை கடத்தல் மற்றும் பாலியல் வன்கொடுமை புகார்கள் எழத்துவங்கியது

nithyanandha, nithyanandha kailaasaa, நித்யானந்தா, கைலாசா,

இது தொடர்பாக புகார்கள் அடுத்தடுத்து தொடர்ந்து எழவே., காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வந்தனர். அனைவருக்கும் டிமிக்கி கொடுத்து அவ்வப்போது இணையத்தளம் மூலமாக சீடர்களிடையே உரையாற்றி வந்த நிலையில்., ஈகுவாடார் நாட்டில் இருக்கும் தீவிற்கு கைலாசா என்று பெயர் வைத்து., அதனை தனி நாடாக அறிவிக்கும் பணியில் தற்போது தீவிர களப்பணியில் வந்தார். இது தொடர்பாக பல வீடியோ காட்சிகளும் அடுத்தடுத்து வெளியாகி வந்த நிலையில்., ஈகுவடார் நாட்டில் நித்தி இல்லை என்றும்., எங்களது நாட்டின் பெயர் அவதூறாக பரப்பப்பட்டு வருவதாகவும்., அவர் ஹைதி என்ற தீவிற்கு தப்பி சென்றுள்ளார் என்றும் அதிகாரபூர்வ அறிவிப்புகள் வெளியானது.

இந்த நிலையில் தற்போது வெளியாகியுள்ள வீடியோ காட்சிகளில்., தான் திருவண்ணாமலையில் இருந்த நேரத்தில் அமைதியாக இருந்திருந்தால் 100 மதத்தோடு 101 ஆவது மடமாக இருந்திருப்பேன் என்றும்., தன்னை அடித்து துன்புறுத்தி பெங்களூருக்கு அனுப்பிய நேரத்தில்., பெங்களூரில் இருக்கும் செட்டியாரின் இல்லத்திற்கு ஆன்மீக செயல்பாட்டிற்க்காக சென்றேன் என்றும்., எனக்கு அங்கு ரூ.101 தட்சணை மற்றும் மூன்று வேலை சாப்பாடு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை கிடைக்கும். எனது வாழ்க்கையில் எவ்வுளவு மாற்றங்கள் என்று பாருங்கள்.. என்னை எவ்வுளவு தான் அடிப்பீர்கள்., நான் வளர்ந்து கொண்டே தான் செல்கிறேன்.. எனக்கு எந்த பிரச்சனை என்றாலும் சிவன் இருக்கிறார்., பராசக்தி இருக்கிறார்., காலபைவரவர் இருக்கிறார்.. தாய் மீனாட்சி பார்த்துக்கொள்வார். 

nithyanandha, nithyanandha kailaasaa, நித்யானந்தா, கைலாசா,

என்னை எவ்வுளவுதான் விரட்டுவார்கள்.. திருவண்ணாமலையில் விரட்டினார்கள் பெங்களூர் சென்றேன்.. பெங்களூரில் இருந்து விரட்டினார்கள் மதுரைக்கு சென்றேன்.. மதுரையில் இருந்து விரட்டினார்கள் மீண்டும் பெங்களூருக்கே நல்ல மனம் கொண்டவரால் கோவில் மற்றும் ஆசிரமம் அமைக்கப்பட்டு சென்றேன்.. எனது வாழ்க்கையில் கடந்த 2003 ஆம் வருடம் நடந்த சம்பவத்தில்., வியாபார உக்திக்காக எனது பெயரில் அன்னாசிப்பழ கர்ப்பம் என்ற பெயரில் வெளியான தனியார் பத்திரிகை நிறுவனத்தின் செயல்பாடுகளால் வந்தவை அனைத்தும். அன்றைய தினத்தில் தம்பதி ஒருவர் திருமணம் முடிந்து பல வருடங்கள் ஆகிறது., எங்களுக்கு புத்திர பாக்யம் இல்லை.. ஆசிர்வாதம் செய்யுங்கள் என்று கூறினார்கள்.. அவர்கள் கொண்டு வந்த பழங்களை அவர்களிடமே கொடுத்து., நீங்கள் இந்த பழங்கள் அனைத்தும் சாப்பிடுங்கள் என்று கூறினேன். அவர்கள் கொண்டு வந்ததில் அன்னாசி பழமும் இருந்தது. 

பொதுவாக அன்னாசி பழம் சாப்பிட்டால் கருத்தரிக்காது என்ற சந்தேகத்தில்., மீண்டும் என்னிடம் அனைத்து பழத்தையும் சாப்பிட வேண்டுமா? என்று சந்தேகத்துடன் கேட்டார்கள்.. நான் அனைத்தும் சாப்பிடுங்கள் என்று கூறினேன். அவர்களின் நல்ல நேரமோ? எனது நல்ல நேரமோ? அவர் கருத்தரித்து குழந்தையை பெற்றெடுத்தார். அதுவரை யாரும் என்னை சீண்டியது கூட இல்லை.. இந்த செய்தி காற்றில் தீயை போல பரவி., நாளொன்றுக்கு 300 பேர் அன்னாசி பழத்துடன் காத்துகொண்டு இருந்தனர். அவர்களுக்கும் ஆசீர்வாதம் செய்தேன். நான் செட்டியார் வீட்டு ஆன்மீக பொட்டியடி நான்.. என்னை அப்படியே விட்டிருந்தால் திருவண்ணாமலையிலேயே பத்தோடு பதினொன்றாக இருந்திருப்பேன்.. என்னை அடித்து அடித்து இப்போது மொத்தமாக எழுந்திருத்துள்ளேன். இதிலிருந்தே நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளது தொடர்பான வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

nithyananda speech about her history good and sad incidents


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->