தனியார் மருத்துவமனை அலட்சியத்தால் கர்ப்பிணி பெண் பலி?.. கண்ணீரில் உறவினர்கள்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி காந்தல் பகுதியை சார்ந்தவர் மோகன்ராஜ் (வயது 25). இவர் எலக்ட்ரீஷியனாக பணியாற்றி வரும் நிலையில், இவரது மனைவி மாயா (வயது 20). இவர்கள் இருவருக்கும் திருமணம் முடிந்து ஒரு வருடம் ஆகிறது. தற்போது மாயா நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் நிலையில், நேற்று முன்தினத்தின் போது பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. 

இதனையடுத்து மாயாவை அங்குள்ள பார்வதி மெடிக்கல் சென்டர் என்ற தனியார் மருத்துவமனையில் பிரசவத்திற்க்காக அனுமதி செய்யவே, பெண் மருத்துவர்கள் பிரசவம் பார்த்துள்ளனர். மாயாவிற்கு அழகிய பெண் குழந்தை பிறந்த நிலையில், நள்ளிரவு நேரத்தில் மாயா திடீரென உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனை அறிந்த உறவினர்கள் கதறி அழுதது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், மாயாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி மோகன்ராஜ் ஊட்டி மத்திய காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதன் அடிப்படையில், காவல் துறையினர் தனியார் மருத்துவமனைக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். பின்னர் மாயாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சூழ்நிலையில், நேற்று காலை நேரத்தில் உறவினர்கள் அங்குள்ள சாலையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டு, காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும், இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்கள், தனியார் மருத்துவமனையில் போதிய மருத்துவ சிகிச்சை அளிக்கவில்லை.

நேற்று முன்தினம் இரவு 7 மணிவரை குழந்தை மற்றும் தாயை தங்களிடம் காண்பிக்கவில்லை என்றும், மாயாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், இது குறித்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர். இதனையடுத்து காவல் துறையினர் மாயாவின் மரணத்தை சந்தேக மரணம் என்று வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ள துவங்கினர். மேலும், குழந்தைகள் நல அதிகாரிகளும் தனியார் மருத்துவமனைக்கு சென்று குழந்தை ஆரோக்கியத்துடன் உள்ளதா? என்ற சோதனையும் செய்தனர். இது குறித்த விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Nilgiris Pregnant girl died after delivery relations raise complaint pvt hospital foolish treatment


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->