உணவின்றி தவித்த தெரு நாய்களுக்கு உணவு வழங்கிய காவல் அதிகாரி... வைரலாகும் புகைப்படம்.!!
Nilgiris police officer gives food for dogs
கரோனா வைரஸின் தாக்கமானது அதிகரித்துள்ளதால், ஊரடங்கு உத்தரவானது அமலாகியுள்ளது. இதனால் காய்கறிக்கடைகள் போன்ற அத்தியாவசிய பொருட்களின் கடைகள் மட்டும் செயல்பட்டு வருகிறது.
அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளை தவிர்த்து உள்ள கடைகள் மூடியுள்ளது. இதுமட்டுமல்லாது பொதுமக்களும் வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளதால், பொதுமக்களின் நடமாட்டமும் குறைந்துள்ளது.
இதன் காரணமாக உணவின்றி தவித்து வரும் ஆதரவற்ற நபர்களுக்கு பல்வேறு தரப்பினர் உதவி செய்து வரும் நிலையில், தெருக்களின் காவலனாக இருந்து வரும் தெரு நாய்களும் உணவின்றி சுற்றி வருகிறது.
இந்த நிலையில், நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர், தொரப்பள்ளி, மக்கமூலா மற்றும் செம்பாலா பகுதியில் பசியால் வாடி வரும் தெருநாய்களை பிஸ்கட் மற்றும் பிரட் போன்ற உணவுகளை தீயணைப்பு படையினர் வழங்கி வருகின்றனர். இது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
Nilgiris police officer gives food for dogs