நீலகிரி: கள்ளக்காதலனுடன் கரம் கோர்த்த பெண்மணி.. தேடிச்சென்று இழுத்துவைத்து சரமாரியாக வெட்டித்தள்ளிய கணவன்.! - Seithipunal
Seithipunal


புதுக்கோட்டை மாவட்டத்தை சார்ந்தவர் செல்வகுமார் (வயது 43). இவரது மனைவி சந்தியா (வயது 25). செல்வகுமார் கூலித்தொழிலாளியாக பணியாற்றி வரும் நிலையில், இவர்கள் இருவருக்கும் மூன்றரை வயதுடைய பெண் குழந்தை இருக்கின்றார். செல்வகுமாருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வந்த நிலையில், கணவன் - மனைவியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. 

இந்த நிலையில், சந்தியாவிற்கும் - செல்வகுமாரின் உறவினரான நீலகிரி கோத்தகிரி பகுதியை சார்ந்த மாரிமுத்து (வயது 28) எனபவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கமானது நாளடைவில் கள்ளக்காதலாக மாறவே, இருவரும் தனிமையில் உல்லாசமாக இருந்து வந்துள்ளான். 

கடந்த ஒன்றரை மாதத்திற்கு முன்னதாக மாரிமுத்து புதுக்கோட்டைக்கு சென்றிருந்த நிலையில், வீட்டில் செல்வகுமார் இல்லாத நேரத்தில் மாரிமுத்து தனது கள்ளக்காதலி சந்தியாவுடன் உல்லாசமாக இருந்து வந்துள்ளார். 

இதனைத்தொடர்ந்து தனது கள்ளக்காதலி மற்றும் குழந்தையை தன்னுடன் கோத்தகிரிக்கு அழைத்து வந்து குடும்பம் நடத்தி வந்ததாக தெரியவருகிறது. மனைவியை காணாது தேடியலைந்த நிலையில், சந்தியா கள்ளக்காதலன் மாரிமுத்துவுடன் சென்றது தெரியவந்துள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த செல்வகுமார் கோத்தகிரிக்கு நேற்றிரவு சென்று, வீட்டில் இருந்த மாரிமுத்துவை வெளியே இழுத்துவந்து அரிவாளால் சரமாரியாக வெட்டினார். உயிருக்கு போராடிய மாரிமுத்தை மீட்ட அக்கம் பக்கத்தினர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். பின்னர் இது குறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்படவே, வழக்குப்பதிவு செய்து தலைமறைவான செல்வகுமாரை காவல் துறையினர் தேடி வருகின்றனர். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Nilgiris man Murder Attempt by Pudukkottai Youngster due to Affair


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->