காதலனை இழந்த துக்கம் ஒரு வருடமாக மாறாத சோகம்.. பெண் எடுத்த விபரீத முடிவு.!
Nilgiris girl Suicide due to Love Failure 23 Jan 2021
நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி அரவெனு பகுதியை சார்ந்தவர் பாலகிருஷ்ணன். இவரது மகள் நிர்மலா (வயது 22). இதே ஊரை சார்ந்த மற்றொரு வாலிபரை, நிர்மலா காதலித்து வந்தாக கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த ஒரு வருடத்திற்கு முன்னதாக வாலிபர் மஞ்சள் காமாலை நோய்வாய்ப்பட்டு உயிரிழந்துள்ளார். இந்த துக்கத்தில் இருந்த நிர்மலா, காதலன் இறந்து ஒரு வருடம் ஆகியும், அவனின் இழப்பை தாங்க இயலாது மனதளவில் வருந்தி வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த சில மாதமாகவே விரக்தியில் இருந்த நிர்மலா, வீட்டில் ஆட்கள் இல்லாத சமயத்தில் தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள கோத்தகிரி காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
Nilgiris girl Suicide due to Love Failure 23 Jan 2021