கிணற்றில் விழுந்த தங்கை.. காப்பாற்ற சென்ற சகோதரர், உறவினர்.. குடும்பத்தையே கண்ணீரில் மிதக்கவிட்ட சோகம்..!! - Seithipunal
Seithipunal


கிணற்றில் உயிருக்காக தத்தளித்த தங்கையை காப்பாற்ற சென்ற அண்ணனும், உறவினர் ஒருவரும் என மூவர் பலியான சோகம் அரங்கேறியுள்ளது. 

நீலகிரி மாவட்டத்தில் உள்ள தேவலா பகுதியை சார்ந்தவர் சுகன்யா (வயது 22). இவர் அங்குள்ள வனப்பகுதியில் இருக்கும் பாழடைந்த கிணற்றில் விழுந்திருக்கிறார். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த சுகன்யாவின் அண்ணன் தமிழ் அழகன் கிணற்றுக்கு விரைந்து சென்றுள்ளார். 

மேலும், தமிழ் அழகனுடன் உறவினர் முரளிதரன் என்பவரும் கிணற்றில் விழுந்து சுகன்யாவை காப்பாற்ற முயற்சிக்கவே, மூவரும் அடுத்தடுத்து கிணற்றுக்குள் மூழ்கியுள்ளனர். இதனையடுத்து இந்த விஷயம் தொடர்பாக தீயணைப்பு படையினர் மற்றும் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், மூவரின் உடலையும் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விஷயம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Nilgiris Devala sister, Brother, Relation die in Well


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->