இரவில் உறங்க சென்ற மாணவி.. சுவற்றில் " சாரி டூ ஆல் ".. கண்ணீரில் குடும்பத்தினர்.! - Seithipunal
Seithipunal


நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் தேவர்சோலை அடுத்துள்ள பாடந்துறை கிராமத்தை சார்ந்தவர் சஜீவன். இவர் வெளிநாட்டில் பணியாற்றி வருகிறார். இவரது மகள் சரண்யா (வயது 20). இவர் அங்குள்ள அரசு கல்லூரியில் இளநிலை இரண்டாம் வருடம் பயின்று வருகிறார். 

சரண்யாவின் இல்லத்தில் அவரது தாயார் மற்றும் சகோதரர் இருந்த நிலையில், வழக்கம்போல வெள்ளிக்கிழமை இரவு உறங்க சென்றுள்ளார். மறுநாள் நீண்ட நேரமாகியும் அவர் எழுந்திரிக்காத நிலையில், கதவை தட்டியும் திறக்கவில்லை. 

கதவை உடைத்து உள்ளே செல்கையில், அவர் தூக்கில் பிணமாக தொங்கியுள்ளார். இந்த விஷயம் தொடர்பாக தேவர்சோலை காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், சரண்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

மேலும், அவரது அறையில் சோதனை செய்கையில், சுவற்றில் " சாரி டூ ஆள் " என்று எழுதி வைத்துள்ளார். அவரது அலைபேசியை சைபர் கிரைம் காவல் துறையினருக்கு அனுப்பி வைத்துள்ள நிலையில், விசாரணைக்கு பின்னர் அவரது தற்கொலைக்கான காரணம் தெரியவரும் என்று காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Nilgiris 20 year old girl Saranya suicide and wrote wall " sorry to all " police investigation


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->