நீலகிரியில் நிலச்சரிவு! பாதிக்கப்பட்ட மக்கள்!
nilagiri rain fall
தொடர் கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் 300க்கும் மேற்ப்பட்ட இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு மரங்கள் சாய்ந்துள்ளது. இதன் காரணமாக பல இடங்களில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.
போர்கால அடிப்படையில் வீழ்ந்த மரங்களை வெட்டி அப்புறப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றது. இந்த பணியில் நெடுஞ்சாலை துறையினர் , தீயணைப்பு படையினர் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் சீரமைப்பு பணிகளில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
கடந்த ஒரு வாரமாக நீலகிரி மாவட்டத்தில் சூறாவளி காற்றுடன் கனமழை பெய்து வருவதால் 200-க்கும் அதிகமான இடங்களில் மின் கம்பங்கள் சாய்ந்துள்ளது.
மேலும், அம்மாவட்டத்தில் புதியதாக கட்டப்பட்ட தொகுப்பு வீடுகள் மழை மற்றும் சூறைக்காற்றால் சேதமடைந்துள்ளன. ஊட்டியில் மின்தடை காரணமாக குடிநீர் விநியோகம் தடைபட்டுள்ளது.
கடந்த 7 நாட்களாக மின்சார வசதி, குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டது. இதனால் ஊட்டி மக்கள் அவதிக்கு உள்ளாகினர்.