#JustIN: நெய்வேலி என்.எல்.சி பாய்லர் வெடித்து விபத்து.. 15 பேர் படுகாயம்..!!
Neyveli NLC Boiler Accident 01 July 2020 15 injuries
நெய்வேலி அனல்மின்நிலையத்தில் பாய்லர் வெடித்து சிதறியுள்ளதாகவும், 15 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தின் கடலூர் மாவட்டத்தில் உள்ள நெய்வேலியில் அனல்மின் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த அனல்மின் நிலையத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இங்கு அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதும், இதனால் பல உயிரிழப்புகள் ஏற்படுவதும் தொடர்கதையாகியுள்ளது. மேலும், விபத்துகளுக்கு தகுந்த மாற்று நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறதா? எதனால் விபத்துகள் ஏற்படுகிறது? என்ற கேள்விக்கான விடைகள் இன்று வரை மர்மமாகவே இருக்கிறது.
இந்த நிலையில், இன்று சுமார் 300 க்கும் மேற்பட்ட பணியாளர்கள் அனல்மின் நிலையத்திற்குள் பணியாற்றி வந்த நிலையில், திடீரென பாய்லர் வெடித்து சிதறியுள்ளது. இந்த விபத்தில் 15 க்கும் மேற்பட்ட பணியாளர்கள் படுகாயத்துடன் அங்குள்ள மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டுள்ளனர். இந்த தகவல் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
Neyveli NLC Boiler Accident 01 July 2020 15 injuries