சென்னை அருகே பிரபல செய்தி தொலைக்காட்சியின் நிருபர் வெட்டி கொலை.! பெரும் பரபரப்பு.!!
NEWS Reporter murder in kanjipuram
தனியார் செய்தி தொலைக்காட்சியின் நிருபர் ஒருவர் காஞ்சிபுரத்தில் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் தாலுகா சோமங்கலம் அருகே உள்ள நல்லூர் கிராமத்தைச் சேர்ந்த ஞானவேல் ஏசுதாசன் மகன் இசுரவேல் மோசஸ்(வயது 26). இவர் தனியார் செய்தி தொலைக்காட்சியின் நிருபர் பனி செய்து வருகிறார்.
இந்நிலையில், மோசஸ் நேற்று இரவு தனது வீட்டில் இருந்த போது, மர்ம நபர்கள் சிலர் அவரிடம் தொலைப்பேசி எண் கேட்பது போன்று வெளியில் வரவழைத்து உள்ளனர். வெளியே வந்த வரை அந்த மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டி விட்டு தப்பியுள்ளனர்.
மோசஸ் ரத்தக் காயங்களுடன் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக சோமங்கலம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
English Summary
NEWS Reporter murder in kanjipuram