கொரோனா வைரஸ்: தமிழகம் முழுதும் விதிக்கப்பட்ட புதிய கட்டுப்பாடு.!
new update announcement about corona virus
உலகம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள கரோனா வைரஸின் அச்சம் இந்தியாவிலும் அதிகரித்துள்ளது. இதனால் நாடுதழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, மக்கள் வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது.
அத்தியாவசிய பணிகளுக்கு மட்டுமே மக்கள் வெளியே வர அனுமதி வழங்கப்பட்டனர். இதனைப்போன்று அத்தியாவசிய பொருட்கள் தயார் செய்யும் நிறுவன பணிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்திய அரசு பல நிதிஉதவி திட்டங்கள் மக்களுக்கு அறிவித்த நிலையில், கரோனா தடுப்பு நடவடிக்கைக்கு மக்கள் நிதிஉதவி அளிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.
வெளிமாநிலத்தில் இருந்து தமிழகம் வந்தவர்கள் தாங்களாகவே அவசர கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் அவர்கள் கூறியுள்ளார்.
மேலும், கொரோனா அறிகுறி இருக்கும் பட்சத்தில் உங்களை நீங்களே தனிமைப்படுத்திக்கொள்ளுங்கள் எனவும், இறைச்சி, மீன் கடைகளில் சமூக இடைவெளி என்பது சவாலாக இருக்கிறது. இதுவரை தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை மீறிய 25,000 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு இருக்கின்றது." என்று தெரிவித்துள்ளார்.
English Summary
new update announcement about corona virus