திருப்பத்தூரில் மின்சாரம் தாக்கி புதுமாப்பிள்ளை உயிரிழப்பு.! - Seithipunal
Seithipunal


திருப்பத்தூர் மாவட்டத்தில் திருமணமாகி 7 நாட்களே ஆன நிலையில் மின்சாரம் தாக்கி புதுமாப்பிள்ளை உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் சி.கே. ஆசிரமம் பகுதியை சேர்ந்த ரவி என்பவரின் மகன் கார்த்திகேயன்(25). இவர் அதே பகுதியை சேர்ந்த இவரது அக்கா மகள் ஸ்ரீபிரியாவை கடந்த 7 நாட்களுக்கு முன்பு திருமணம் செய்துள்ளார்.

இந்நிலையில் கார்த்திகேயன் பாத்ரூம் சுவிட்ச் போட்டபோது திடீரென மின்சாரம் தாக்கி கீழே விழுந்துள்ளார். இவரது சத்தம் கேட்டு மனைவி ஸ்ரீப்ரியா மற்றும் குடும்பத்தினர் வந்து பார்த்தபோது கார்த்திகேயன் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார்.

இதையடுத்து கார்த்திகேயனை மீட்டு சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் கார்த்திகேயன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்து உள்ளார்.

இதைத் தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து திருப்பத்தூர் தாலுகா காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

New groom electrocuted to death in tirupattur


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->