வங்காளதேச அணிக்கு புதிய கேப்டன் நியமனம்! - Seithipunal
Seithipunal


வங்காளதேச ஒருநாள் போட்டி அணியின் புதிய கேப்டனாக ஆல்-ரவுண்டர் மெஹிதி ஹசன் மிராஸ் நியமிக்கப்பட்டுள்ளார். 

அடுத்த மாதம் 2-ந் தேதி முதல் வங்காளதேசம் - இலங்கை அணிகள் 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெறுகிறது.இந்தநிலையில்  வங்காளதேச ஒருநாள் போட்டி அணிக்கு புதிய கேப்டனை நியமித்து வங்காளதேச கிரிக்கெட் வாரியம் நேற்று அறிவிப்பு வெளியிட்டது.அதன்படி, வங்காளதேச ஒருநாள் போட்டி அணியின் புதிய கேப்டனாக ஆல்-ரவுண்டர் மெஹிதி ஹசன் மிராஸ் நியமிக்கப்பட்டுள்ளார். 

தனது பேட்டிங்கில் கவனம் செலுத்துவதற்காக வங்காளதேச டி20 கிரிக்கெட் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து நஜ்முல் ஹூசைன் ஷன்டோ சமீபத்தில் விலகினார். இருப்பினும் அவர் ஒருநாள் போட்டி அணியின் கேப்டனாக தொடருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் புதிய கேப்டனாக ஆல்-ரவுண்டர் மெஹிதி ஹசன் மிராஸ் நியமிக்கப்பட்டுள்ளார். 

27 வயதான மெஹிதி ஹசன் அடுத்த ஒரு ஆண்டுக்கு கேப்டனாக இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  மெஹிதி ஹசன் மிராஸ் இதுவரை 105 ஒருநாள் ஆட்டங்களில் ஆடி 1,617 ரன்கள் மற்றும் 110 விக்கெட்டுகள் எடுத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.நஜ்முல் ஹூசைன் இல்லாத சமயத்தில் மெஹிதி ஹசன் 4 ஒருநாள் போட்டியில் வங்காளதேச அணியை வழிநடத்தி இருக்கிறார்.அதில் இருந்து அவர் கேப்டன் பொறுப்பை கவனிக்க இருக்கிறார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

New captain appointed for the Bangladesh team


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->