தெய்வத்தை பஸ் ஸ்டேண்டில் வீசி சென்ற தாய்! புதுக்கோட்டை அருகே நடந்த அதிர்ச்சி சம்பவம்!
new born baby in road side at pudukottai
குழந்தையும் தெய்வமும் ஒன்று என்பார்கள், ஆனால் புதுக்கோட்டை அருகே பிறந்து சில மணி நேரமே ஆன பச்சிளம் குழந்தையை பஸ் ஸ்டேண்டில் வீசி சென்று இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் ஆலடிகொல்லை பேருந்து நிறுத்தத்தில் குழந்தை அழும் சத்தம் கேட்டு அந்த வழியாக சென்ற மூதாட்டி ஒருவர் சென்று பார்த்துள்ளார்.
அங்கு ஒரு பையில் பிறந்து சில மணி நேரங்களே ஆன ஆண் குழந்தை ஒன்று அழுது கொண்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த மூதாட்டி உடனடியாக அக்கபக்கத்தில் உள்ளவர்களுக்கு தகவல் தெரிவித்தார்.
உடனடியாக அங்கு வந்த இளைஞர்கள் காவல்துறைக்கு தகவல் அளிக்கவே, அந்த குழந்தையை மீட்டு காவல்துறையினர் மீட்டு கீரமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர்.
தற்போது அந்த குழந்தைக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு நலமுடன் உள்ளது. குழந்தையை தொட்டில் குழந்தை திட்டத்தில் அனுமதிக்க குழந்தையை சமூகநலத் துறையிடம் ஒப்படைக்க உள்ளதாக வருவாய் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், குழந்தையை வீசி சென்ற தாய் குறித்து வருவாய்த் துறையினரும், காவல்துறையினரும் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
new born baby in road side at pudukottai