எறும்புகள் கடித்து தின்ன பிறந்த குழந்தையை உயிருடன் தூக்கி எறிந்த சம்பவம்.!
new born baby found in thirupur
திருப்பூர் அருகே இருக்கும் மங்கலம் காயிதே மில்லத் நகரின் நொய்யல் ஆற்றின் கரையோரத்தில் இருக்கும் முட்புதர்களில் இருந்து முட்புதரில் பச்சிளம் குழந்தையின் அழுகுரல் அந்த வழியே சென்றுள்ள மக்களின் காதுகளில் கேட்டுள்ளது.
இந்த பகுதி மக்கள் அழுகுரல் கெட்டப்பக்கம் சென்று பார்த்தபோது அங்கே அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. பிறந்து சில மணி நேரங்களே ஆன பெண் குழந்தை ஒன்று அந்த முட்புதரில் சிக்கி கத்தி கதறி அழுது கொண்டிருந்துள்ளது.
மேலும், அந்த குழந்தையின் உடலை எறும்புகள் கடித்து தின்றுக்கொண்டு இருந்துள்ளது. இதனை பார்த்த பொதுமக்கள் மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தனர். பின்னர் உடனடியாக அந்த குழந்தையை மீட்டு அருகில் இருக்கும் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
முதலுதவி செய்யப்பட்டு, உடனே மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அந்த குழந்தை அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு அந்த குழந்தையை பராமரித்து வருகின்றனர். இதுகுறித்து காவல் துறையினர் வக்குப்பதிவு செய்து குழந்தையின் தாயை தேடி வருகின்றனர்.
English Summary
new born baby found in thirupur