திருவள்ளூர் || கட்டிலில் இருந்து கீழே விழுந்து குழந்தை பலி..!
new born baby death in thiruvallur
கட்டிலில் இருந்து குழந்தை கீழே விழுந்து பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
திருவள்ளூர் மாவட்டம் புதூர் பேட்டையை சேர்ந்தவர் ராஜா. இவருக்கு திருமணமாகி வித்யா என்ற மனைவியும் பத்து மாத பெண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று குழந்தையை கட்டிலில் படுக்க வைத்து விட்டு திவ்யா வாசலில் பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு உள்ளே சென்று பார்த்தபோது கட்டிலில் படுத்திருந்த குழந்தை எதிர்பாராத விதமாக கீழே விழுந்தது தெரியவந்தது. இதில், குழந்தைக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக குழந்தையை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கட்டிலில் படுக்க வைத்து இருந்தால் பத்து மாத குழந்தை உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
English Summary
new born baby death in thiruvallur