ரத்தகரையுடன் கிடந்த துணி.. கடித்து குதறிய தெருநாய்கள்.. பிறந்து சில மணிநேரங்களே ஆன பச்சிளம் குழந்தைக்கு நேர்ந்த அவலம்..!
new born baby death in madurai
பிறந்து சில மணி நேரங்களே ஆன சிசு நாய்களால் கடித்து குதறப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தேனி ரோட்டில் ரத்தக் கரையுடன் துணி ஒன்று கிடந்துள்ளது. அதனை அங்குள்ள தெருநாய்கள் அதனை கடித்து குதறி கொண்டிருந்தன. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர்.
விரைந்து வந்த காவல்துறையினர் அங்கு வந்து பார்த்த போது அந்த துணியை எடுத்து பார்த்த போது அதில், பிறந்து சிலமணி நேரமே ஆன சிசுவை நாய்கள் கடித்து அந்த சிசு சிதைந்திருந்ததை கண்டு காவல்துறையினர் அதிர்ச்சியடைந்தனர். குழந்தையின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் குழந்தையை வீசி சென்றது யார்? குழந்தையின் பெற்றோர் யார் என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிறந்து சில மணி நேரங்களே ஆன குழந்தை சாலையில் வீசப்பட்டு தெருநாய்கள் கடித்து குதறிய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
new born baby death in madurai