சும்மா இருக்கும் இந்தியாவை சீண்டும் நேபாளம்.. உட்கட்சியிலேயே கதறவிடும் தலைவர்கள்.!!
Nepal President speech angry by Nepal Politician
இந்தியாவின் அண்டை மற்றும் நெருங்கிய நட்பு நாடாக நேபாளம் இருந்து வந்தது. நேபாளத்துடன் இந்தியா மிகுந்த பாரம்பரிய நட்புறவை கொண்டு இருந்தது. இந்நிலையில், உத்திரகாண்ட் மாநிலத்தில் இருக்கும் லீபுலெட் பகுதியில் திடீரென தங்கள் நாட்டுடன் இணைத்து நேபாளம் உரிமை கொண்டாடியது.
இதற்காக நேபாள அரசே அதிகாரபூர்வ புகைப்படத்தை வெளியிட்ட நிலையில், அந்நாட்டின் பிரதமர் சர்மா ஒளி இந்தியாவிற்கு எதிராக பேசி வந்துகொண்டு இருக்கிறார். மேலும், கொரோனா வைரஸின் பரவலுக்கு காரணமாக இந்தியாவில் இருந்து சட்டவிரோதமாக வரும் நபர்கள் என்று கூறினார்.
இதுமட்டுமல்லாது தன்னை பதவியில் இருந்து நீக்க இந்திய தூதரகம் சதி செய்து வருவதாக தெரிவித்த நிலையில், இந்தியாவிற்கு எதிரான பல சரமாரி விமர்சனம் முன்வைக்கப்பட்டது. இந்த விஷயத்திற்கு உட்கட்சியிலேயே குழப்பம் ஏற்பட்டுள்ளது. மேலும், அவர் பதவி விலகவும் மூத்த தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
Nepal President speech angry by Nepal Politician