பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தலைமை ஆசிரியர் கிறிஸ்டோபர் தலைமறைவு.! மாணவி கூறிய அதிர்ச்சி புகார்.! - Seithipunal
Seithipunal


திசையன்விளையில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்டதாக புகாரில், தலைமையாசிரியர் கிறிஸ்டோபர் ஜெபக்குமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளையில் அரசு உதவி பெறும் தனியார் மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில், பிளஸ் 2 படிக்கும் மாணவிகளுக்கு மட்டும் ஸ்பெஷல் வகுப்பு எடுப்பதாக பள்ளி தலைமை ஆசிரியர் தெரிவித்துள்ளார்.

அந்த வகுப்பில் பயின்ற மாணவிகளில் ஒருவரிடம், தலைமை ஆசிரியர் தவறான நோக்கத்தில் நடக்க முயற்சி செய்து உள்ளார். 

இதனை உணர்ந்த அந்த மாணவி மற்ற மாணவிகளிடம் இது குறித்து அதிர்ச்சியுடன் தெரிவித்துள்ளார். அந்த மாணவிகளும் தலைமையாசிரியர் அப்படி நடக்க முயன்றதாக பதிலுக்கு சொல்லவே அதிர்ந்து போன மொத்த பள்ளி மாணவிகளும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து திகைத்து நின்றனர்.

இந்நிலையில், அடங்காத அந்த தலைமை ஆசிரியர் கிறிஸ்டோபர் ஒரு மாணவியின் செல்போனுக்கு சாட் செய்துள்ளார். இதுகுறித்து மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். அவர்கள் உடனடியாக பள்ளி நிர்வாகத்திடம் தகவலை தெரிவித்துள்ளனர்.

மேலும், காவல்துறைக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து போலீசார் தலைமையாசிரியர் கிறிஸ்டோபர் ஜெபக்குமார் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இதனை அறிந்த அவர் தலைமறைவாகி விட்டார்.

இதையடுத்து தலைமை ஆசிரியர் கிறிஸ்டோபர் ஜெபக்குமார் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

nellai school head master escape


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->