ஒரே சமூகம், காதல் திருமணம், இரு காலையும் இழந்த கணவன், மகளை அடித்து இழுத்து சென்ற பெற்றோர்!
NELLAI LOVE ISSUE HUSBAND COMPLAINT
மனைவியை அவரின் பெற்றோர் அடித்து இழுத்துச் சென்றுவிட்டதாக, இரு காலையும் இழந்த கணவன் கண்ணீர் விடும் சம்பவம் நெல்லை அருகே அரங்கேறியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூர் அடுத்த கேசவனேரியை சேர்ந்தவர் பிரகாஷ். இவர் கடந்த 5 ஆண்டுகளாக திவ்யா என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார்.
பிரகாஷும் திவ்யாவும் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இருவரின் வீட்டிலும் இவர்களின் காதலை கண்டு கொள்ளவில்லை.
கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு, சென்னையில் இருந்து இருசக்கர வாகனத்தில் ஊருக்கு திரும்பிய பிரகாஷ், சாலை விபத்தில் சிக்கி இரு கால்களும் செயல் இழந்து போயின.
கால் இழந்த போதிலும் பிரகாஷை கைவிடாமல் திவ்யா தொடர்ந்து காதலித்து வந்துள்ளார். ஆனால், இவர்களின் திருமணத்திற்கு திவ்யாவின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில், கடந்த 20 ஆம் தேதி வீட்டை விட்டு வெளியேறிய திவ்யா, காதலனை கரம் பிடித்தார். இதனை அறிந்த திவ்யாவின் பெற்றோர், பிரகாஷின் வீட்டிற்கு சென்று திவ்யாவை தரதரவென அடித்து இழுத்துச் சென்றுள்ளனர்.
மேலும், பிரகாஷை தாக்கி, வீட்டில் இருந்த பொருட்களையும் அடித்து நொறுக்கியுள்ளனர். இதனையடுத்து தனது மனைவியை தன்னுடன் சேர்த்து வைக்கக்கோரி, காவல்நிலையத்தில் கண்ணீருடன் பிரகாஷ் புகார் அளித்துள்ளார்.
புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொன்று வருகின்றனர்.
English Summary
NELLAI LOVE ISSUE HUSBAND COMPLAINT